மண்ணின் குரல்: ஜூலை 2016: நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 




நாமக்கல் நகரில் உள்ள நாமகிரி என்னும் மலையில்  இரண்டு  குடைவரைக் குகைக் கோயில்கள் உள்ளன.  இம்மலையில் கிழக்குப் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் குகைக் கோயிலும் மேற்குப் பகுதியில் ஸ்ரீ நரசிம்மசுவாமி குகைக் கோயிலும் உள்ளன. இவ்விரு குகைக் கோயில்களும் கி.பி. 8ம் நூற்றாண்டில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த சோமன் என்னும் அதியேந்திரன் குடைவித்தமையாகும். இவை பின்னர் நாயக்க மன்னர்கள் காலத்தில் மிகச் சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட்டது. 

​இன்றைய விழியப் பதிவு இக்கோயிலைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.



விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2016/07/blog-post.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=lmKCu6OuuaY&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் செவாலியர்.டாக்டர்.மதிவாணன், திருமதி.பவளசங்கரி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

விழியப் பதிவில் உள்ள தகவல்கள் குறிப்பு: தமிழ்நாட்டின் தல வரலாறும் பண்பாட்டுச் சின்னங்களும். நூலாசிரியர் வீ.கந்தசாமி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஜூலை 2016: நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES